உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!!

Read Time:2 Minute, 16 Second

346340440selfieவானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது.

ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´ எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான ´தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்´ மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும்.

ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் ´செல்ஃபி´ எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இது அந்தப் பதிவைப் பார்த்த பலரையும் ஆச்சரியத்தில் உறையச் செய்தது.

இவர்கள் ´செல்ஃபி´ எடுக்கும் வீடியோ தான் தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.

ஆகஸ்ட் 21- ஆம் திகதி யூடியூபில் புகைப்படவியலாளர் டானியல் லாவால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய நிலையில் 221,623 பேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை படித்துக்கொண்டிருக்கும் போது இந்த எண்ணிகை அதிகரித்திருக்கக் கூடும்.

இதுவரையில் எடுக்கப்பட்ட ´செல்ஃபி´- க்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரூர் அருகே தூக்குபோட்டு டிரைவர் சாவு!!
Next post புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!