அரூர் அருகே தூக்குபோட்டு டிரைவர் சாவு!!
அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கல்மடவு தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மோகன்(24).
இவர் லோனில் டாடா ஏ.சி.வாகனத்தை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மோகன் தந்தை பழனியிடம் லோன் பணத்தை கட்டிவிட்டு வருகிறேன் என்று கூறி விட்டு வெளியில் சென்றார். அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கீரப்பட்டி அருகே இயங்கி வரும் கல்குவாரியில் உள்ள ஒரு மரத்தில் மோகன் தூக்கில் பிணமாக தொங்குவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து அரூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் டிரைவர் மோகனின் உடலை மீட்டு அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தந்தை பழனி அரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மகன் எப்படி இறந்தார்? என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இது குறித்து கண்டுபிடிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating