உடுமலை மாணவியிடம் சில்மிஷம்: 3 வாலிபர்கள் கைது!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
சுதந்திரதின விடுமுறையையொட்டி சாந்தி ஊருக்கு வந்தார். அவரை பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிபிரசாத் (35), சபரி (20), சிவானந்தன் (22) ஆகியோர் தங்கள் வீட்டுக்குள் தூக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் சாந்தியை சில்மிஷம் செய்ததோடு பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக தெரிகிறது. எனினும் சாந்தி அவர்களிடம் இருந்து தப்பினார்.
இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பயந்த மாணவி விடுதிக்கு சென்றார். அங்கு சென்ற சாந்தி அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இது குறித்து விடுதி காப்பாளர் விசாரித்தபோது நடந்தவற்றை கடகடவென கண்ணீர் மல்க கூறினார்.
விடுதி காப்பாளர் சாந்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சாந்தியை தங்களுடன் அழைத்துச்சென்றனர். இது பற்றி உடுமலை அனைத்து மகளிர் போலீசில் சாந்தி புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வந்தார்.
இந்த நிலையில் அவர்கள் உடுமலையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மணிபிரசாத், சபரி, சிவானந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating