பேஸ்புக்கில் அவதூறு விமர்சனம்: வாலிபர் மீது வழக்குபதிவு!!

Read Time:1 Minute, 54 Second

a38ef88f-7b39-4456-90ff-9e1f3715d15e_S_secvpfமார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷைன்ஜோஸ்(வயது 29).

இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது பேஸ்புக் ஐ.டி.யில் இவரை பற்றியும், இவரது தொழிலை பற்றியும் அவதூறாக விமர்சித்து பாகோடு பகுதியை சேர்ந்த ஜான் கிங்ஸ்லி என்ற ஷாஜி(30) என்பவர் தகவல் வெளியிட்டிருந்தாராம்.

இதனால் மனவேதனை அடைந்த ஷைன்ஜோஸ் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்வதற்காக சென்றார். அப்போது கடந்தான் கோடு சாவடிமுக்கு பகுதியில் சென்ற போது ஜான் கிங்ஸ்லி அங்கு நின்றார். அவரிடம் ஷைன் ஜோஸ் ‘ஏன் என்னை பற்றி பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளாய்?’ எனக் கேட்டார்.

அதற்கு ஜான் கிங்ஸ்லி, ‘நான் அப்படி தான் செய்வேன், இதுகுறித்து நீ போலீசில் புகார் செய்தால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியதோடு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதுகுறித்து ஷைன்ஜோஸ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜித் மேரி விசாரணை நடத்தினார். பின்னர், ஜான் கிங்ஸ்லி மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!
Next post வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!