மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!
தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (வயது15). இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜமால்மணி மகன் சரவணக்குமார் (14) அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் கடந்த மாதம் மதிப்பெண் தேர்ச்சி அட்டை வழங்கப்பட்டது. குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் 2 பேரும் தேர்ச்சி அடையவில்லை.
தங்களது மதிப்பெண் அட்டைகளை பெற்றோரிடம் காட்டாமல் வைத்திருந்தனர். பெற்றோர்கள் கேட்டபோது இன்னும் எங்களுக்கு தேர்ச்சி அட்டை வழங்கவில்லை என தெரிவித்தனர். இருந்த போதும் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டால் அவர்கள் திட்டுவார்கள் என பயந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதனை வகுப்பறையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடைவேளையின்போது வெளியே சென்று ஒரு தோட்டத்தில் இருந்த அரளிவிதைகளை சாப்பிட்டனர். மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பாததால் மற்ற மாணவர்கள் இது குறித்து தங்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர்கள் தேடி பார்த்தபோது தோட்டத்தில் 2 பேரும் மயங்கி கிடந்தனர். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.
Average Rating