பெற்றோர் கண்ணெதிரே 16 வயது பெண் சுட்டுக்கொலை: ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்!!

Read Time:2 Minute, 4 Second

32aefcdd-f946-48ce-a1e0-737f7cd2c8b0_S_secvpfஅசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து போடோ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்று வளைத்து தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகள் குறித்த தகவலை அம்மாநிலத்தில் உள்ள இந்தோ-பூடான் எல்லை கிராமமான டிவிமுக்ரி கிராமத்தை சேர்ந்த பெண் ப்ரியா பாசுமட்டாரி தான் தந்திருப்பார் என தீவிரவாதிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ப்ரியாவின் வீட்டிற்குள் புகுந்து, வீட்டை விட்டு வெளியே இழுத்துவந்து கொடூரமாக தாக்கினர். அதுமட்டுமல்லாமல் அப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமையை அவரது பெற்றோர் கண் திறந்து பார்க்கவேண்டும் என்று மிரட்டியவாறு ஒன்பது முறை அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களது இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாவுக்கு பழிக்குப் பழிவாங்கியதாக எண்ணிய தீவிரவாதிகள் அப்பெண்ணின் சடலத்தை வயல்வெளியில் தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.

தங்கள் மகள் சுட்டுக்கொல்லப்பட்டதை பார்த்து பயத்தில் உறைந்து போன பெற்றோர், அப்பெண்ணின் சடலத்தை கூட இது வரை வீட்டிற்கு எடுத்துவராமல் மிரண்டு போய் இருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!!
Next post பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!