ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு!!
Read Time:1 Minute, 8 Second
ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் உயர்தர சிகிச்சை பெற தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.
பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் உயர் சிகிச்சைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் வரை முதல் மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை 50 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Average Rating