மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயம்!!

Read Time:2 Minute, 11 Second

f6f89a55-b3d2-4ec4-baed-3f60f382d808_S_secvpfநாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22–ந் தேதி தையற்கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் அவரது தந்தை புகார் செய்துள்ளார்.

அதேபோல் மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு ஜூவல்லரியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்கள் உறவினர்களின் வீடுகளுக்கு வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 25–ந் தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவரது தாய் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: 6 பேர் மீது வழக்கு!!
Next post பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!