விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: 6 பேர் மீது வழக்கு!!
Read Time:1 Minute, 15 Second
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (வயது23). இவர் விருதுநகர் பாண்டியன் நகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
எனக்கும், பாண்டியன் நகரைச் சேர்ந்த நாகலிங்கேஸ்வரன் (30) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 10 பவுன் நகையும், ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக ரூ.1 லட்சம் கேட்டு கணவர் சித்ரவதை செய்கிறார்.
இதற்கு கணவரின் தந்தை நாகேந்திரன், தாய் லட்சுமி, சகோதரி கவிதா, சகோதரன் முத்துக்குமார், அவரது மனைவி பிரேமா ஆகியோர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Average Rating