மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி: கணவன்– மாமியாருக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 47 Second

00c71e23-0ada-409a-8f4e-ae4d4c2fdb77_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது30). இவரது மனைவி காளீஸ்வரி(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

முருகேசன் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து செல்வார். மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகம் அடைந்தார்

நேற்று அவர் ஊருக்கு வந்து இருந்தார். அப்போது கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காளீஸ் வரியை கணவன் முருகேசன், முருகேசனின் தாயார் மீனாட்சி ஆகியோர் தாக்கினர்.

பின்னர் முருகேசன் மனைவி உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் உடலில் தீப்பிடித்ததும் அவர் கூச்ல்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

உடல் கருகிய அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி. பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி விட்ட முருகேசன், மீனாட்சி ஆகியோரை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமி உள்ளவரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும்: திரிணாமூல் எம்.எல்.ஏ உளறல்!!
Next post திருவெண்ணைநல்லூர்: பிளஸ்–1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!!