பூமி உள்ளவரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும்: திரிணாமூல் எம்.எல்.ஏ உளறல்!!
Read Time:1 Minute, 14 Second
நாடு முழுவதும் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்றும் கற்பழிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ ஒருவர் உளறியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான தீபக் ஹால்தார், பூமி உள்ள வரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு உடனடியாக கடும் கண்டனமும் எழுந்துள்ளது. இவரது கருத்தை கண்டித்துள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவரான மமதா சர்மா, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்த தீபக்கை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Average Rating