தேனீர் கொடுக்க தாமதம் ஆனதால் தகராறு: கழுத்தையறுத்து வாடிக்கையாளர் படுகொலை!!
கிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் தங்களது குடும்பத் தொழிலான அச்சகம் வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் இருவர் வாடிக்கையாக காலை, மாலை வேளைகளில் அருகாமையில் உள்ள டீக்கடை ஒன்றில் இருந்து தேநீர் வரவழைத்து குடிப்பது பழக்கம்.
இவ்வகையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் தங்களுக்கு தேநீர் அனுப்பி வைக்கும்படி டீக்கடைக்காரரிடம் கூறி உள்ளனர். வெகு நேரமாகியும் அச்சகத்துக்கு தேநீர் வராததால் சகோதரர்களில் ஒருவரான வாசிம்(20) என்பவர் டீக்கடைக்கு மீண்டும் சென்று, உரிமையாளரான ஹபீப் என்பவரிடம் தாமதத்துக்கான காரணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு, ஹபீப் குத்தலாக ஏதோ கூற, இருதரப்பினருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. டீக்கடை உரிமையாளர் ஹபீபுக்கு ஆதரவாக வந்த உறவினர்களில் ஒருவர் அச்சக உரிமையாளர் வாசிமின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்தார்.
இதை தடுக்க வந்த வாசிமின் சகோதரர் அடிகுர் என்பவருக்கும் சரமாரியான கத்திக்குத்து விழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக டீக்கடை உரிமையாளர் ஹபீப் மற்றும் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அடிகுரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
Average Rating