கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!
பிரிட்டனில் உள்ள Ascot என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்தபிறகு அவருடைய சாம்பலை வைரம் போன்ற ஒரு பொருளாக மாற்றி எப்பொழுதும் தன்கையிலேயே வைத்துள்ளார். இதனால் தன்னுடைய கணவர் தன்னுடன் இருப்பது போன்றஉணர்வு ஏற்படுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
பிரிட்டனில் உள்ள Ascot என்ற பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணின் கணவர்சமீபத்தில் மரணம் அடைந்தார். தனது காதல் கணவரின் பிரிவை தாங்க முடியாத அவர்கணவரின் சாம்பலை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.இதற்காக அவர் cremorials நகைகள் செய்யும் ஒரு லேப்ரட்டரியை அணுகி தனதுகணவரின் சாம்பலில் இருந்து ஒரு உலோகம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
கணவரின் சாம்பலை வைரம் போன்ற ஒரு உலோகமாக தயார் செய்து அதை எப்பொழுதும்கையில் அணிந்திருக்கும் வகையில் மோதிரமாக மாற்றியுள்ளார். இதற்காக அவர் £5,000 பணம் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating