விருத்தாசலம் பகுதியில் 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Read Time:1 Minute, 38 Second

41dbee36-89a8-42be-8c88-b1e7fd80be89_S_secvpfவிருத்தாசலம் பழமலை நாதர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், நெய்வேலி வட்டம் 29–ஐ சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (36) என்பவருக்கும் இடையே இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நலகுழுவினருக்கு நேற்று புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஷ்வரி மற்றும் குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை சிறுமியின் பெற்றோரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
அதை தொடர்ந்து, இன்று நடக்க இருந்த அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு கடலூர் குழந்தைகள் நலக்குழு தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரனிடம் அழைத்து சென்றனர். பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் சிறுபாக்கம் அருகே எஸ்.புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (33) என்பவருக்கும் இடையே வருகிற 31–ந் தேதி நடைபெற இருந்தது. இந்த திருமணத்தையும் இக்குழுவினர் தடுத்து நிறுத்தி, சிறுமியை மீட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்!!
Next post உலகின் மிக நீளமான மாலை நியூயார்க்கில் தயாரிப்பு: இந்திய ஆன்மீக குருவுக்கு அர்ப்பணம்!!