சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்!!

Read Time:6 Minute, 21 Second

3b76c06b-adb9-4200-bf1d-297981be1314_S_secvpfசதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“எனக்கும், கார்த்திக் கவுடாவுக்கும் முதலில் அவரது நண்பர் குஷால் மூலம் தான் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, பெங்களூர் சஞ்சய்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இருவரும் சந்தித்து பேசினோம். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினோம். கார்த்திக்கும், நானும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம். என்னை காதலிப்பதாக கார்த்திக் கூறினார். நானும் அவரை காதலித்தேன். என்னை கார்த்திக் உயிருக்கு உயிராக காதலித்தார்.

இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் வராது என்று எண்ணினேன். நான் சொன்னதும் புகைப்பிடிப்பதை கூட கார்த்திக் நிறுத்தி விட்டார். அந்த அளவுக்கு என்னை காதலித்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார். திருமணத்திற்கு பின்பு நடிக்க கூடாது என்றும் சொன்னார். நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.

கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு சென்றோம். மங்களூரில் உள்ள, அவருடைய வீட்டிற்கு 2 பேரும் சென்றோம். நான், அவருடைய வீட்டிற்குள் கால் எடுத்து வைத்ததும், என் மனைவி வந்து விட்டாள் என்று சந்தோஷமாக கூறினார். இருவரும் வீட்டில் இருந்து நீண்டநேரம் பேசினோம். அப்போது என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கார்த்திக் கேட்டுக்கொண்டார்.

உடனே நான் திருமணத்திற்கு முன்பு, அப்படி நடந்து கொள்ள கூடாது என்று சொன்னேன். உடனே அவர், சாமி அறைக்குள் அழைத்து சென்று, என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் இது நடந்தது. அதன்பிறகு, 11 மணிக்கு மங்களூரில் உள்ள ‘பப்க்கு’ நாங்கள் 2 பேரும் சென்றோம். அங்கு வைத்து அவருடைய நண்பர்களிடம், என்னை மனைவி என்று கார்த்திக் அறிமுகம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்ததும், இருவருக்கும் திருமணம் தான் நடந்து விட்டதே என்று கூறி, என்னை வலுக்கட்டாயப்படுத்தி கார்த்திக் கற்பழித்துவிட்டார். மேலும் பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் வீடு வாங்கி கொடுத்தார். அந்த குடியிருப்புக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். அந்த குடியிருப்பில் வைத்து 4 அல்லது 5 முறை என்னை கார்த்திக் கற்பழித்து இருப்பார். ஆனால் சமீபகாலமாக என்னுடன் பேசுவதை கார்த்திக் நிறுத்தி விட்டார்.

அதுபோல, கார்த்திக்கும் என்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசவே மறுத்து விட்டார். நான் அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை கொடுக்கும்படியும், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை அழிக்கும்படியும் கார்த்திக் கூறினார். ஒரு கட்டத்தில் என்னை மறந்து விடு என்று கார்த்திக் கூறினார். என்னை பார்ப்பது, செல்போனில் பேசுவது அனைத்தையும் நிறுத்தி விட்டார். கார்த்திக் தான் எனது கணவர் என்று நினைத்து வாழ்ந்தேன். கார்த்திக் மற்றும் அவரது தாய் பேச்சால் வேதனை அடைந்ததுடன், தற்கொலை செய்யவும் முடிவு செய்தேன்.

நான் பணத்திற்கோ, கார்த்திக்கின் தந்தை மத்திய மந்திரி என்பதற்காகவோ காதலிக்கவில்லை. எனக்கு பணமோ, அதிகார செல்வாக்கோ தேவையில்லை.

கார்த்திக் என்னை திருமணம் செய்திருக்கிறார். அவர் என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அவருடன் வாழவே ஆசைப்படுகிறேன்.

கார்த்திக்குடன் செல்போனில் பேசியதை, மிரட்டும் நோக்கத்திற்காக பதிவு செய்யவில்லை. அவர் என்னை உயிருக்கு உயிராக காதலிக்கும்போது, அவர் அன்பாக பேசுவதை கேட்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக தான் பதிவு செய்து வைத்திருந்தேன்.

நான் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ வேண்டும். இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர் கொள்ளவும் தயாராக உள்ளேன்.”

இவ்வாறு நடிகை மைத்திரி கண்ணீர் மல்க கூறினார். பேட்டியின்போது கார்த்திக்குடன் பேசியதற்கான ஆடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!
Next post விருத்தாசலம் பகுதியில் 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!