கடனுக்கு கேட்டதால் மோதல்: பழனி பெட்ரோல் பங்க் கேஷியருக்கு பாட்டில் குத்து!!

Read Time:1 Minute, 21 Second

609e4224-3ec1-4abb-a2a6-bf520fc4ad9f_S_secvpfபழனி டவுன் பழைய தாராபுரம் சாலையில் அம்மன் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் ஆயக்குடி பகுதியை சேர்ந்த அருள்சாமி (வயது25) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு நபர் பெட்ரோல் கேட்டு வந்தார். 45 ரூபாய்க்கு ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கிய அவர் பணத்தை கொடுக்காமல் கடன் குறித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு அருள் சாமி கடனுக்கு பெட்ரோல் கொடுக்க மாட்டோம் பணத்தை கொடுங்கள் இல்லை என்றால் வாங்கிய பெட்ரோலை திரும்ப தந்து விட்டு போங்கள் என்றார்.

ஆத்திரம் அடைந்த அவர் பாட்டிலால் கேஷியர் அருள்சாமியை குத்தினார். தடுக்க வந்த செல்லத்துரை என்பரையும் வயிற்றில் குத்தினார். படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி உறையூரில் புதுமணப்பெண் மாயம்!!
Next post வியாசர்பாடி அருகே போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை: பொது மக்கள் மறியல்!!