திருச்சி உறையூரில் புதுமணப்பெண் மாயம்!!
Read Time:1 Minute, 2 Second
திருச்சி விலாயத்சாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது26). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ரபிகாபேகம் (23) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25–ந் தேதி திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து ரபிகா பேகம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று அன்சாரியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு அன்சாரி வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் இருந்த ரபிகா பேகம் திடீரென மாயமானார்.
இது குறித்து அன்சாரி உறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான ரபிகா பேகத்தை தேடி வருகிறார்கள்.
Average Rating