திருவெண்காட்டில் மகளை கொலை செய்த பெண் கைது!!
நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 48). இவர், திருவெண்காடு மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா (35). இவர்களுக்கு, சுவேதா கலைவாணி (9) என்ற மகளும், சுதர்ஷன் (4) என்ற மகனும் இருந்தனர். இந்தநிலையில் கணபதி, வனிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறு செய்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த வனிதா நேற்று காலை தனது மகள் சுவேதா கலைவாணியை அழைத்து கொண்டு கருவிழந்தநாதபுரம் காவிரி ஆற்றுக்கு சென்றார். அங்கு சுவேதா கலைவாணியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் ஆற்றில் குதித்தார்.
அப்போது தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த வனிதாவை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். பின்னர் ஆற்று தண்ணீரில் பிணமாக மிதந்த சிறுமி சுவேதா கலைவாணியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற வனிதா, அவருடைய கணவர் கணேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating