குரோம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் சுபா (18). குரோம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.
தற்போது செமஸ்டர் முடிந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே விடுதியில் உள்ள மாணவிகள் ஊருக்கு சென்றிருந்தனர். 26 மாணவிகள் மட்டுமே தங்கியிருந்தனர்.
சுபா அறையில் தங்கி இருந்த 2 மாணவிகளும் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டனர். சுபா மட்டும் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுபா தனது அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாப்பிட அழைக்க சென்ற மாணவிகள் சுபா தூக்கில் தொங்கியதை பார்த்து அலறினர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிட்லப் பாக்கம் போலீஸ்சார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். சுபா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Average Rating