நெய்வேலியில் கல்லூரி சென்ற மாணவி மாயம்!!
Read Time:1 Minute, 14 Second
நெய்வேலி புதுநகர் 21–வது வட்டம் சித்திரை தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 19). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயப்பிரியா கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு ஜெயப்பிரியா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஜெயப்பிரியா இல்லை.
இதையடுத்து கருணாநிதி தனது மகள் மாயமானது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகிறார்கள்.
Average Rating