கடையம் அருகே விஷம் குடித்து அக்காள்–தங்கை தற்கொலை!!

Read Time:3 Minute, 6 Second

9375d481-6fd3-41f1-b9a8-d0c537573ba1_S_secvpfநெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் கீழ் கடனா அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு ரோட்டில் நேற்று 2 இளம்பெண்கள் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இசக்கிராஜ், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்2 பேரும் இறந்து கிடந்த இடத்தில் ஒரு செல்போன் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண்கள் கடையம் கற்பகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சூட்சான் மகள் ராமலட்சுமி (வயது 21), சூட்சானின் தம்பி முருகனின் மகள் முப்பிடாதிமுத்து (13) என்பது தெரியவந்தது. முப்பிடாதிமுத்து அங்குள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். 2 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

ராமலட்சுமியும், முப்புடாதி முத்துவும் அக்காள் தங்கை என்பதால் இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றி வந்துள்ளனர். வீட்டு வேலைகளை சரியாக செய்யமாட்டார்களாம். இதனால் முருகன், முப்பிடாதிமுத்துவை சத்தம் போட்டுள்ளார். மேலும் ராமலட்சுமியுடன் சேரக்கூடாது எனவும் கண்டித்தாராம்.இதில் மனமுடைந்த 2பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி நேற்று கடனா அணைக்கு சென்று குளித்துள்ளனர். பின்னர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த காரணத்திற்காகத்தான் தற்கொலை செய்தனரா ?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச இணையதளங்களை தடை செய்ய இயலாது!!
Next post 15–ந்தேதி திருமணம்: நண்பர்களுக்கு விருந்து வைத்த புதுமாப்பிள்ளை சாவு!!