15–ந்தேதி திருமணம்: நண்பர்களுக்கு விருந்து வைத்த புதுமாப்பிள்ளை சாவு!!

Read Time:2 Minute, 3 Second

ce55eb20-6099-471f-81d8-4508f44b2933_S_secvpfதிருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் சுதர்சன் (28). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அடுத்த மாதம் 15–ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு நேற்று சுதர்சன் கனகம்மாள்சத்திரம் சென்றார். அங்கு நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார்.

பின்னர் இரவு சுதர்சன் பட்டாபிராமைச் சேர்ந்த நண்பர் சுதீஷ் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். சுதீஷ் வண்டி ஓட்ட சுதர்சன் பின்புறம் அமர்ந்து இருந்தார்.

இரவு 10.30 மணி அளவில் நாராயணபுரம் கூட்டு ரோடு அருகே பைக் வேகமாக சென்று கொண்டு இருந்தபோது சாலையில் கிடந்த பெரிய கல்லில் மோதி கவிழ்ந்தது. இதில் இருவரும் காயத்துடன் ரோட்டில் மயங்கி கிடந்தனர்.

அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து இருவரையும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே சுதர்சன் பரிதாபமாக இறந்தார். சுதிஷ் படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணத்துக்கு 2 வாரம் இருக்கும் நிலையில் சுதர்சன் மரணம் அடைந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடையம் அருகே விஷம் குடித்து அக்காள்–தங்கை தற்கொலை!!
Next post வெள்ளக்கோவில்: கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!!