மனைவி, 3 மகள்கள் சுட்டுக் கொலை: காரணம் கௌரவமாம்!!
Read Time:59 Second
பாகிஸ்தானின் குஜரன்வாலா மாவட்டத்தில் மனைவி மற்றும் 3 மகள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அம் மாவட்டத்துக்குட்பட்ட ஃபைஸல் நகரில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்நபர், குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றவே இந்த 4 கொலைகளையும் செய்ததாக பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், அவரது குடும்ப கௌரவம் எந்த வகையில் பறிபோக இருந்தது என்பது தொடர்பாக பொலிசாரிடம் தெரிவிக்க மறுத்துவிட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது
Average Rating