ஆரணியில் சொத்து தகராறில் தாத்தாவை கொன்ற பேரன் கைது!!
Read Time:1 Minute, 8 Second
ஆரணி தாலுகா தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 90) விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். ஏழுமலைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது.
இதுகுறித்து ஏழுமலையிடம் நேற்று அவரது பேரன் லாரி டிரைவர் பரசுராமன் (42) என்பவர் சொத்து கேட்டு தாத்தா ஏழுமலையிடம் தகராறு செய்தார்.
இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு கருங்கல்லால் தாககி ஏழுமலையை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை தேடிவந்தனர். இந்நிலையில் மேட்டுக்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.
Average Rating