குடியாத்தம் அருகே காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் பேசவில்லை: கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

Read Time:1 Minute, 29 Second

8e0c4f00-9fb4-4a96-a42e-91f95ba422c2_S_secvpfகுடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 22). கட்டிட மேஸ்திரி. ஏரிப்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் யுவராணி (20). அரிபாபு, யுவராணி இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

கணவருடன் வசித்து வந்த யுவராணி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

யுவராணி காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது பெற்றோர் வருத்தத்தில் யுவராணியிடம் பேசாமல் இருந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் யுவராணியை நேருக்கு நேர் பார்த்தும் பேசாமல் சென்றுள்ளனர். இதனால் விரக்தியடைந்த யுவராணி நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து டிஎஸ்பி விஜயகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலக்கட்டு நோயால் அவதிப்படும் குழித்துறை கோவில் யானையின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு!!
Next post ஆரணியில் சொத்து தகராறில் தாத்தாவை கொன்ற பேரன் கைது!!