மாமியார்– மாமனார் மிரட்டல்: வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீக்குளிப்பு!!

Read Time:1 Minute, 54 Second

45b1c416-1d54-4305-a319-5d2a38c3677f_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள ரெங்கசமுத்திர பட்டியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது20). இவருக்கும் மேலக்கோவில்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் பிரபு (வயது 25) என்பவருக்கும் கடந்த 13.9.2013–ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 7 பவுன்நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மனைவியிடம் மேலும் 15 பவுன் நகை வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் பிரபு, மாமனார் ராஜாராம், மாமியார் லட்சுமி ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மங்கையர்கரசி கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஆனால் 4 மாதமாக தனது கணவர் தன்னை வந்து பார்க்காததாலும், அவரது மாமனார்– மாமியார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாலும் இன்று காலை தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மங்கையர் கரசியின் தந்தை திண்டுக்கல் தாலுகா போலீசில் தனது மகளை தற்கொலைக்கு தூண்டயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒட்டன்சத்திரத்தில் திருமண வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!!
Next post சீட்டு விளையாடி ஒரு கார் வாங்கினாரா ?