வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவனை காணவில்லை!!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் மாணவன் ஒருவர் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் யோகநாதன் சிவதர்ஷன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்றிரவு குறித்த மாணவன் இரவு 11 மணிவரை படித்துக்கொண்டிருந்ததாகவும் தாய் மகன் படித்தது போதும் வந்து நித்திரை கொள்ளுமாறு கூறியதற்கு இன்னும் 5 நிமிடங்களில் வந்து நித்திரை கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
பின்பு 10 நிமிடம் கழித்து மகன் வராததால் தாய் மகன் படித்து கொண்டிருந்த அரைக்கு சென்று பார்க்கும் போது மகன் அரையில் இருக்க வில்லை
அதன் பின்பு அயலவர்களின் உதவியுடன் மாணவனை தேடும் நடவக்கையில் ஈடுப்பட்டப்போதும் மாணவன் கிடைக்காமையினால் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating