நான் விவாகரத்து வாங்கவில்லை…!!

Read Time:2 Minute, 5 Second

roja1தமிழ், தெலுங்கில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. 2002–ல் டைரக்டர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். ரோஜா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ‘செம்பருத்தி’ படத்தை ஆர்.கே. செல்வமணிதான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு பிறகு ரோஜா நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நின்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறார்.

ஆர்.கே.செல்வமணி சென்னையில் இருக்கிறார். ரோஜாவுக்கும் ஆர்.கே. செல்வமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக பேச்சுக்கள் கிளம்பின. செல்வமணியை பார்க்க ரோஜா சென்னைக்கு வருவதில்லை என்றும், கூறப்பட்டது. இதனை ரோஜா மறுத்துள்ளார். அவர் கூறும் போது

எனது கணவர் சினிமாவில் இருக்கிறார். நான் அரசியலில் இருக்கிறேன். இதனால் எங்களால் அடிக்கடி சந்திக்க முடிவது இல்லை. இதை வைத்துதான் அப்படி பேசுகிறார்கள். ஐதராபாத்தில் என் வீட்டில் வந்து பார்த்தால் உண்மை தெரியும். என் கணவரும் நானும் குழந்தைகளும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது கணவர் சென்னையில் இருந்து ஐதராபாத் வந்து எங்களை பார்த்து விட்டு போகிறார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள் மீது பாலியல் பலாத்காரம், கொலை – தந்தைக்கு கொடூர தண்டனை!!
Next post துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த இளம் பெண்!!