சேலத்தில் மாயமான இளம் பெண் மீட்பு!!
சேலம் களரம்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் காஞ்சனா(வயது 17) இவர் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று காலை வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை. இதனால் அவரது தாயார் திட்டியுள்ளார். மனம் உடைந்த காஞ்சனா கொண்டலாம்பட்டி, இளந்தோப்பு பகுதியில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவருடைய தாத்தாவும் அவருக்கு தகுந்த அறிவுரைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து பாத்ரூமுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்ற காஞ்சனா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அவர்கள் கொண்டாலம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சங்ககிரியில் உள்ள தனது மாமா வீட்டில் காஞ்சனா இருப்பது தெரியவந்தது.
போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு தகுந்த அறிவுரை கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
Average Rating