மானேஜருக்கு பீர்பாட்டில் குத்து: வாலிபர்கள் 2 பேர் மீது வழக்கு!!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வெங்கடேஸ்வரன் (வயது 37). இவர் கோவையில் உள்ள தனியார் டூல்ஸ் நிறுவனத்தில் அக்வுண்ட்ஸ் மேனேஜராக உள்ளார்.
இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் மேன்சனில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று அறையில் வெங்கடேஸ்வரன் இருந்தபோது பக்கத்து அறையில் தொலைக்காட்சி பெட்டியில் சத்தம் அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
சத்தம் காரணமாக அதிருப்தியடைந்த வெங்கடேஸ்வரன் பக்கத்து அறையில் இருந்த வாலிபர்களிடம் தொலைக்காட்சியின் சத்தத்தை குறைத்து வைக்கும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பீர்பாட்டிலை உடைத்து வெங்கடேஸ்வரனின் தோளில் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஸ்வரனை பாட்டிலால் குத்தியதாக ராஜேஸ் பிரபு (23), வேல்ராஜ் (27) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating