ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்!!

Read Time:1 Minute, 55 Second

2eb20f9d-9084-4720-863c-e85a6708eb38_S_secvpfமேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார்.

அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது. நீண்ட நாட்களாகியும் அவர் திருப்பி செலுத்தாததால் ஊர் பஞ்சாயத்து முன் நிறுத்தப்பட்டார். வாடகை பாக்கி செலுத்தாதற்காக ஊர் மக்கள் அவரை அடித்து உதைக்க வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.

ஆளாளுக்கு அவரை அடித்து உதைத்தனர். அவர் கதறி துடித்தார். இதைப்பார்த்த மகள் ஓடிவந்து தந்தை தாக்கப்படுவதை தடுத்தார். உடனே கிராமத்தினர் அவளை அங்கிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர். அதன்பிறகு அவர் மாயமாகிவிட்டார்.

தந்தைக்கு தண்டனை நிறைவேற்றிய பின்பு மகளை தேடிபோது ரெயில் தண்டவாளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தந்தை தாக்கப்படுவதை தடுத்த அவரை சிலர் தூக்கிச் சென்று கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடிவருகிறார்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது!!
Next post சேலத்தில் மாயமான இளம் பெண் மீட்பு!!