15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது!!
கண்டி – ஹத்தரலியத்தைப் பொலிஸ் பிரிவில் பாடசாலை சிறுமி ஒருவரைத் திருமணம் செய்ய முயற்சித்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் 15 வயது மாணவி ஒருவருக்கும் 21 வயது இராணுவ வீரர் ஒருவருக்கு மிடையே காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருதரப்பையும் சோ்ந்த சில பெண்கள் இணைந்து இருவருக்குமிடையே பதிவுத் திருமணம் செய்து வைக்க விவாகப் பதிவாளர் ஒருவரிடம் சென்றுள்ளனர்.
மாணவியின் வயது பற்றி சந்தேகம் எழுந்த விவாகப் பதிவாளர் பொலிஸ் நிலையம் சென்று அத்தாட்சிக் கடிதம் கொண்டு வரும்படி கூறியுள்ளார். பொலிஸ் நிலையம் சென்றபோது மேற்படி சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து வைத்திய பரிசோதனைக்கு சிறுமியை உட்படுத்தி நீதி மன்றில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating