கணவர் உடந்தையுடன் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்!!

Read Time:1 Minute, 27 Second

2eb20f9d-9084-4720-863c-e85a6708eb38_S_secvpfசென்னை தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 32) என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு கிருத்திகா கணவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிருத்திகா புகார் செய்தார். புகாரில் தன்னை கணவர் தினேஷ்குமார் ஒத்துழைப்புடன் மாமனார் வடிவேல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார்.

இது பற்றி இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப் இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து என்ஜினீயர் கணவர் தினேஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவான மாமனார் வடிவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் கணவர் மீது இரண்டு மனைவிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
Next post 21 ஆயிரம் முறை போனில் தொடர்புகொண்டு முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த பிரெஞ்சு காதலன்!!