ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது!!
Read Time:1 Minute, 4 Second
வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அயூப் கான் என்பவனை கடந்த ஜூலை மாதம் கைது செய்த போலீசார், திகார் சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளிவந்த அயூப் கான், நேற்று காலை சுமார் 6 மணியளவில் புகார் அளித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவளை துடிதுடிக்க கத்தியால் குத்திக் கொன்றான்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவளது தாயாரையும் குத்திவிட்டு தப்பியோடிய குற்றவாளி அயூப்பை கைதுசெய்த போலீசார், அவன்மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating