அசாமில் ஒரே கயிற்றில் மரத்தில் பிணமாக தொங்கிய 2 மாணவிகள்: கற்பழித்து கொலையா?
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே கயிற்றில் 2 மாணவிகள் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமை காணாமல் போன அந்த மாணவிகள், வங்காளதேச எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மரத்தில் பிணமாக தொங்கியதை அவர்களின் உறவினர் ஒருவர் கண்டுபிடித்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் இரு முனைகளிலும் தொங்கிய சடலங்களை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மாணவிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உள்ளூர் மக்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அது உண்மையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என காவல்துறை தெரிவித்தது.
இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் கடந்த மே மாதம் காணாமல் போன 2 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள மா மரத்தில் பிணமாக தொங்கினர். இதுவும் கற்பழிப்பு என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கு ஆதாரம் இல்லை என சி.பி.ஐ. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating