வேறு பெண்ணுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை: மனைவி போலீசில் புகார்!!
விருதுநகர் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிருஷ்ணவேனி ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
எனது கணவருக்கும், பவுன்ராஜ் என்பவரது மகள் சூர்யகலா (32)க்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எனது 2 குழந்தைகளை விட்டு விட்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடு என கணவர் மாரிச்சாமி, சூரிய கலாவுடன் சேர்ந்து மிரட்டி சித்ரவதை செய்கிறார். இது குறித்து பவுன்ராஜிடம் தெரிவித்த போது அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாரிச்சாமி, சூரியகலா மற்றும் பவுன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Average Rating