கள்ளிக்குடி அருகே பிளஸ்–1 மாணவி மாயம்: தந்தை புகார்!!
Read Time:1 Minute, 0 Second
கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது40), விவசாயி. இவரது மகள் விஜயசாந்தி (17). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இரவு விஜயசாந்தி குடும்பத்தினருடன் படுத்திருந்தார். நள்ளிரவில் ஆசைத்தம்பி எழுந்து பார்த்தபோது, மகளை காணாது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளிக்குடி போலீசில் ஆசைத்தம்பி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயசாந்தியை தேடி வருகிறார்.
Average Rating