பேஸ்புக் தகராறில் கொலை: கொலையாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). கார் டிரைவரான இவர் தஞ்சாவூரை சேர்ந்த மரதகம் மலர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு சின்னமுத்துவீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இங்கு சண்முகம் ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது நண்பர் கார்த்திகேயன்.
பாபநாசத்தை சேர்ந்த இவருக்கு சண்முகம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் எண்ணை ஆலையில் வேலை வாங்கி கொடுத்தார். இந்த ஆலையில் கார்த்திகேயன் பணம் முறைகேடு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து சண்முகம் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் பெயரில் பேஸ்புக் சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டது. அதில் கார்த்திகேயன் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படத்துடன் விபசார புரோக்கர் என்று பதிவிறக்கம் செய்திருந்தனர். அதன் கீழ் கார்த்திகேயனின் செல்போன் நம்பரையும் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கார்த்திகேயன் செல்போன் நம்பருக்கு பலரும் தொடர்பு கொண்டு பேசினர்.
இது கார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதில் சண்முகம் பின்னணியாக இருக்கலாம் என கருதினார். இதைத் தெடார்ந்து அவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் கார்த்திகேயன் சண்முகத்தை சந்தித்தார். அப்போது இரு வருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் சண்முகத்தை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி சென்றார்.
வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தனிப்படை அமைத்து கார்த்திகேயனை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன் தஞ்சாவூர் 1–வது மாஜிஸ்திரட்டு கோர்ட்டில் சரணடைந் தார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன்சத்திரம் போலீசார் நாளை மறுநாள் (திங்கட்க்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்கின்றனர். அப்போது ஒரு வாரம் போலீஸ் காவல் கேட்டு மனுதாக்கல் செய்ய உள்ளதாக விசாரணை அதிகாரி விஜயன் இன்று கூறினார். காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Average Rating