அது பாலியல் பலாத்காரத்தை விடக் கொடுமையானது!!!
Read Time:1 Minute, 22 Second
பால்ய வயதில் திருமணம் செய்து வைப்பது பாலியல் பலாத்காரத்தை விட கொடியது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இது போன்ற திருமணம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே, பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் நீதிமன்றத்தில் அவளது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று கோரிய போது நீதிபதி ஷிவாணி சவுகான் இவ்வாறு கூறினார். சட்டப்படி வரதட்சணை வாங்குவது குற்றம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பால்ய திருமணம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மீதும், வரதட்சணை கொடுமை தொடர்பாக பெண்ணின் கணவர் குடும்பத்தார் மீதும் வழக்கு பதிவு செய்ய பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating