கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை!!

Read Time:1 Minute, 41 Second

924f7b17-939e-4d06-a223-89814b94726e_S_secvpfபள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்தவர் வேணு (37). விவசாயி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ரோஜா (10) மற்றும் நிஷா என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளனர்.

ரோஜா 5–ம் வகுப்பு படித்து வருகிறாள். தேவிக்கும் அவரது கணவர் வேணுவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலையிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தேவி குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

விஷமருந்தை வாங்கி வந்து கைக்குழந்தை நிஷாவுக்கு கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் ரோஜாவுக்கும் விஷம் கொடுக்க தேடி இருக்கிறார். ஆனால், அவள் வெளியே விளையாட சென்றுவிட்டதால் தப்பித்து விட்டாள்.

குழந்தை நிஷா இறந்ததும் தேவியும் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொதட்டூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி இறந்தார்.

இதுபற்றி பொதட்டூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கைது: அத்தை மகனை மணந்த பட்டதாரி பெண்!!
Next post ஐஸ் பாக்கெட் சவால் – இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?