நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கைது: அத்தை மகனை மணந்த பட்டதாரி பெண்!!
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கும் காதல் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கணேசனை லட்சுமி வலியுறுத்தி வந்தார்.
ஆனால் கணேசன் அவரை ஏமாற்றிவிட்டு விருத்தாசலம் அருகே உள்ள பெரிய காப்பான்குளம் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் மகள் ரஞ்சிதாவை (வயது 21) திருமணம் செய்ய திட்டமிட்டார். இவர் பி.ஏ. பட்டாரி ஆவார்.
இதையடுத்து ரஞ்சிதா– கணேசன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
இதையறிந்த கணேசனின் காதலி லட்சுமி கோபமடைந்தார். இது தொடர்பாக அவர் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மணமகன் கணேசனை நேற்று ஸ்ரீமுஷ்ணத்தில் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.
கணேசன் கைது செய்யப்பட்ட தகவல் ரஞ்சிதாவின் குடும்பத்துக்கு தெரியவந்தது. அவர்கள் ரஞ்சிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்தனர்.
ரஞ்சிதாவின் அத்தை லட்சுமியின் மகன் பிரபலதாஸ் (26), இவரும் பி.ஏ. பட்டதாரி. பெரியகாப்பான் குளத்தில் வசித்து வந்தார். இவரை ரஞ்சிதாவுக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரஞ்சிதா– பிரபலதாஸ் திருமணம் அங்கு நடைபெற்றது. உறவினர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
Average Rating