ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் சில்மிஷம்: போலீஸ்காரருக்கு தர்மஅடி!!

Read Time:2 Minute, 29 Second

70de67d8-f835-4d3d-9287-2c0644d0c419_S_secvpfநெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று பணி நிமித்தமாக நெல்லை வந்திருந்தார். பின்பு தென்காசி செல்லும் அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சந்திப்பு பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் ஏறினார். அவருக்கும் சொந்த ஊர் பாவூர்சத்திரம்தான்.

அவர் ஏற்கனவே பஸ்சில் வந்த ஆசிரியையிடம் படித்தவர். பஸ்சில் தனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியையை பார்த்ததும் அவரை பார்த்து வணக்கம் சொன்ன போலீஸ்காரர் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். ஆசிரியை அருகே ஒரு சீட் காலியாக இருந்தது. உடனே ஆசிரியை தனது மாணவர் தானே என எண்ணி அந்த போலீஸ்காரரை அருகில் அமர சொன்னார்.

அருகில் அமர்ந்த போலீஸ்காரர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பஸ் நெல்லையை கடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவர் ஆசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த ஆசிரியை உடனடியாக அவரை இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கூறினார். பின்னர் இதுபற்றி பாவூர்சத்திரத்தில் உள்ள தனது கணவரிடம் விவரத்தை கூறி பஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினார்.

பஸ் பாவூர்சத்திரம் வந்ததும் அந்த போலீஸ்காரர் நைசாக இறங்கி தப்பி ஓட முயன்றார். உடனே அருகில் நின்றவர்களும், ஆசிரியையின் கணவரும் சேர்ந்து அந்த போலீஸ்காரரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்பு அவர் பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கற்றுக்கொடுத்த ஆசிரியையிடமே போலீஸ்காரர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!
Next post பேசும் ஆமைகள் எங்குள்ளன தெரியுமா?