அருப்புக்கோட்டையில் பொறியியல் பட்டதாரி பெண் மாயம்!!
Read Time:1 Minute, 16 Second
அருப்புக்கோட்டை நாகலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சுகுணா. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரியை சேர்ந்தவர் வில்லியம் பிரிட்டோ. இவரது மகள் சகாயபெர்லின்.
சென்னையில் எம்.இ. பொறியியல் படித்து முடித்த இவர், அருப்புக்கோட்டையில் தனது சித்தி சுகுணா பராமரிப்பில் இருந்து வந்தார். நேற்று சுகுணாவும், சகாயபெர்லினும் கிறிஸ்தவ ஆலயம் சென்றனர்.
பின்னர் வீடு திரும்பும் போது கடைக்கு சென்று வருவதாக கூறி சகாய பெர்லின் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சுகுணா புகார் செய்தார். 14 பவுன் நகை அணிந்திருந்த சகாயபெர்லின், நகைக்காக கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating