திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றார்!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்குட்பட்டது அழகாபுரி கிராமம். இங்கு வசிப்பவர் மாரீஸ்வரன் (வயது40), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி நாகஜோதி (35).
இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அனை வரும் படுக்கச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் எழுந்த மாரீஸ்வரன், வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மனைவி நாகஜோதி தலையில் போட்டுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு குழந்தைகள் விழித்துக் கொள்ள மாரீஸ்வரன் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏ.முக்குளம் போலீசார் விரைந்து சென்று நாகஜோதி உடலை கைப்பற்றினர். தப்பி ஓடிய மாரீஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating