நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்தா கவுடா மகனுக்கு முன் ஜாமின்!!
Read Time:1 Minute, 21 Second
மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்வதாக கூறி, கற்பழித்ததாக கன்னட நடிகை மைத்திரி போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகார் குறித்து மைத்திரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னிடம் இருந்த ஆதாரங்களையும் மைத்திரி போலீசாரிடம் வழங்கினார். ஆனால் போலீசார் கார்த்திக்கை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். காவல்துறையினரின் இப்போக்கிற்கு நடிகை மைத்திரி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திக் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
Average Rating