விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!

Read Time:3 Minute, 14 Second

kushbooஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஐதராபாத்தில் ஸ்வேதாபாசு விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர். நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் அவர் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து போலீசார் அங்கு முற்றுகையிட்டு கையும் களவுமாக கைது செய்தார்கள்.

முன்னணி நடிகையான ஸ்வேதா விபசாரத்தில் கைதானது தமிழ், தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் ஸ்வேதா தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சினிமா வாய்ப்பு இல்லாததால் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டதாகவும் எனவே தான் வேறு வழியின்றி விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.

இது அவர் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா டுவிட்டரில் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

டைரக்டர் ஹன்சப் மேத்தா தனது அடுத்த படத்தில் ஸ்வேதா பாசுவை நடிக்க வைப்பேன் என்று அறிவித்து உள்ளார். இந்தி டைரக்டர் விக்ரம் பட்டுவும் ஸ்வேதா பாசுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பல இயக்குனர்கள் ஸ்வேதாவுக்கு பட வாய்ப்பு தருவதாக அறிவித்து உள்ளனர்.

ஆனால் குஷ்பு மட்டும் பண கஷ்டத்தால் விபசாரத்தில் ஈடுபட்டேன் என்று கூறிய ஸ்வேதாவின் செயலை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது: நிறைய நடிகைகளுக்கு இவரைப் போல் பிரச்சினைகள் இருக்கின்றன. சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் டி.வி.க்கு போகலாம்.

குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். இப்படி வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு உங்களையே நீங்கள் விற்கும் நிலைக்கு போவதை ஏற்க முடியாது. இது போன்ற செயல்களை பெற்றோர் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பது தான் நெருடலாக இருக்கிறது. அவரது செயலுக்கு பெற்றோரைத் தான் நான் குற்றம் சொல்வேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!
Next post 72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!