அம்பத்தூரில் மயக்க ஊசி போட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: டாக்டர் கைது!!
அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் அபிராமி (33). இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.
சிகிச்சைக்காக அதே தெருவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆயுர்வேத டாக்டர் நடத்தி வந்தார்.
அவரிடம் அபிராமி சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் அபிராமிக்கு நேற்று முன்தினம் திடீர் என உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவர் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது டாக்டர் சதீஷ் குமார், அபிராமிக்கு மயக்க ஊசி போட்டார். அவர் மயங்கிய பின் அவரை கற்பழிக்க முயன்றார். அப்போது திடீர் என அபிராமி எழுந்தார். டாக்டர் தன்னை கற்பழிக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதை பார்த்து திடுக்கிட்டார். டாக்டரை தள்ளி விட்டு தப்பி ஓடினார்.
பின்னர் இது பற்றி அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயுர்வேத டாக்டர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
Average Rating