மதமாற்றத்திற்கு மனைவியை கட்டாயப்படுத்திய கணவன் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனைவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதாக கணவன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் பவார் கூறியதாவது:-
அசார் என்பவர் முஸ்லிம் என்ற போர்வையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்துள்ளது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு மனைவியை மதம் மாறும்படி அசார் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் மீதான புகாரை மறுத்துள்ள அசார், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும், தற்போது தான் ஒரு முஸ்லிம் என்றும் கூறியுள்ளார். சொத்து தகராறு காரணமாக வழக்கில் சிக்க வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Average Rating