வரதட்சணைக்காக மருமகளை குளியலறையில் 3 ஆண்டுகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பம்!!

Read Time:2 Minute, 6 Second

bbd4c983-ddba-4eb2-bc32-d575121d7bdf_S_secvpfபீகார் மாநிலம் தர்பங்கா அருகே, கூடுதல் வரதட்சணை வாங்கி வராத மருமகளை, வீட்டின் குளியறையில் 3 ஆண்டுகளாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வராததாலும், பெண் குழந்தை பெற்றதாலும் ஆத்திரமடைந்த அவரது கணவன், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். வெளியில் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாதபடி வீட்டின் குளியலறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சாப்பாடு சரியாக கொடுக்காமல் இருந்துள்ளனர். குழந்தையைப் பார்க்கக் கூட அனுமதி கொடுக்கவில்லையாம். 3 வயது நிரம்பிய குழந்தை, தாயிடம் வருவதை முற்றிலும் தவிர்த்தது. இதனால், அழுது புலம்ப ஆரம்பித்தார் அந்தப் பெண்.

பின்னர் தந்தையின் தீவிர முயற்சியால் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, நேற்று அந்தப்பெண் மீட்கப்பட்டார். மகளிர் காவல் நிலைய அதிகாரி சீமா குமாரி, அந்தப் பெண்ணைப் பார்த்தபோது கிழிந்துபோன ஆடைகள், திருத்தப்படாத உலர்ந்த தலைமுடி மற்றும் நீளமாக வளர்ந்த நகங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்தார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த பெண் ஒன்றுவிடாமல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் கணவன், மாமனார், மாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!
Next post 7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!