வௌ்ளத்தில் சிக்கிய நடிகையை மீட்க முதலமைச்சர் கோரிக்கை!!
காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நடிகை அபூர்வாயை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் வளர்ந்து வரும் நடிகையான அபூர்வா போஸ், காஷ்மீர் மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
அபூர்வா ஓணம் தினத்தன்று தனது தாயாருக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பின், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் அபூர்வா தனது தாயிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் கேரளாவைச் சேர்ந்த 300 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கக்கோரி கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating